close
Choose your channels

ரஜினி, கமலிடம் ஆதரவு கேட்க மாட்டேன்: விஷால்

Monday, December 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நடிகர் விஷால், இன்று காலை அண்ணாநகர் சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜி.ஆர். சிலை, தி.நகரில் உள்ள காமராஜர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் அரசியல்வாதி அல்ல, மக்கள் பிரதிநிதியாகவே ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை, ஆர்.கே.நகரின் மக்கள் கொடுத்த தைரியம்தான் எனக்கு ஆதரவு. ஆர்.கே. நகர் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்

எந்த அரசியல் கட்சியின் வாக்கு வங்கியை பிரிக்க நான் போட்டியிடவில்லை. எனக்கு 100% வெற்றி வாய்ப்பு உள்ளது. மேலும் எனக்கு ஆர்.கே.நகர் மக்களின் ஆதரவு முழு அளவில் இருப்பதால் ரஜினி, கமல் உள்பட யாரிடமும் நான் ஆதரவு கேட்க மாட்டேன். 

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.