close
Choose your channels

நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: தமிழ் நடிகை

Wednesday, April 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் ஆன நடிகைகள் முத்தக்காட்சியில் நடிப்பதற்கே தயக்கம் தெரிவித்து வரும் நிலையில் நான் நிர்வாணமான நடிக்க கூட என் கணவர் எனக்கு முழு உரிமை கொடுத்துள்ளார் என்று தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ளார். 

மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 ஆகிய தமிழ்ப்படங்களிலும் பல தெலுங்கு, இந்தி, பஞ்சாபி படங்களிலும் நடித்த நடிகை சர்வின் சாவ்லா. கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய்தக்கர் என்பவரை இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டுதான் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.

இந்த நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்வின் சாவ்லா கூறியதாவது: 

என்னுடைய நடிப்பு தொழிலில் எனது கணவர் தலையிட மாட்டார். என்னுடன் நடிக்கும் சக நடிகரை நான் படத்தின் காட்சிக்காக முத்தம் கொடுத்தாலும், ஏன் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார். அந்த அளவுக்கு அவர் என்னை புரிந்து வைத்துள்ளார் என்று சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.