close
Choose your channels

'தெறி' வியாபாரத்தில் நுழைந்தது 'ஐங்கரன்' நிறுவனம்

Tuesday, March 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் சென்சார் இந்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய பலத்த போட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


'தெறி' படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் ரிலீஸ் உரிமையை சினிகேலக்ஸி என்ற நிறுவனம் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன் நாடுகளின் ரிலீஸ் உரிமையை ஐங்கரன் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 14-ல் இந்த படத்தை மேற்கண்ட நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் ஐங்கரன் நிறுவனம் செய்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

மேலும் 'தெறி' படத்தின் கோவை ரிலீஸ் உரிமை ஏற்கனவே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் மற்ற ஏரியாக்களின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த விபரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.