close
Choose your channels

சுவிஸில் சின்மயி அம்மா செய்த அட்டகாசங்கள்: இனியவன் பரபரப்பு பேட்டி

Tuesday, October 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுவிஸ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்தான் கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடகி சின்மயியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக சின்மயியும் அவருடைய தாயாரும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது காட்டூத்தீ போல் திரையுலகில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சுவிஸ் நாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இனியவன் என்பவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சின்மயி மற்றும் அவருடைய தாயார் குறித்து கடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்

சின்மயி மற்றும் அவருடைய தாயார் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தங்களுக்கு கூடுதல் சம்பளம் வேண்டும் என்று பிரச்சனை செய்ததாகவும் பின்னர் வேறு வழியில்லாமல் சுரேஷ் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்ததாகவும் இனியவன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சின்மயி தாயார் மது அருந்திவிட்டு இரவு முழுவதும் சத்தம் போட்டதாகவும் சுவிஸ் நாட்டில் பக்கத்து வீட்டுக்கு இடைஞ்சலாக இருக்கும் வகையில் சத்தம் போட்டால் போலீஸ் புகார் ஆகிவிடும் என்று சுரேஷின் குடும்பத்தினர் பயந்ததாகவும், ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சின்மயி தாயார் போதையில் ரகளை செய்ததாகவும் கூறினார்.

மேலும் வைரமுத்து மீது சின்மயி கூறும் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும், சின்மயி நல்லவராக இருந்தாலும் அவருடைய பின்னணியில் இருந்து கொண்டு அவரை யாரோ இயக்குவதாகவும், ஆனால் உண்மை ஒருநாள் வெளியே வந்து வைரமுத்து நல்லவர் என்பதை நிரூபிக்கும் என்றும் இனியவன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.