close
Choose your channels

நொச்சிக்குப்பம் மீனவ பெண்களுடன் இறுதிச்சுற்று இயக்குனர்

Tuesday, February 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'இறுதிச்சுற்று' படம் மாபெரும் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் படமாக்கப்பட்டது.


இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பெரும் ஒத்துழைப்பு கொடுத்த இந்த பகுதி மக்களுக்கு குறிப்பாக மீனவ பெண்களுக்கு இயக்குனர் சுதா நன்றி கூறுவதற்காக இன்று அந்த பகுதிக்கு நேரில் சென்றார். தங்கள் பகுதியில் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அறிந்து ஏற்கனவே மகிழ்ச்சியில் இருந்த நொச்சிக்குப்பம் மக்கள் இயக்குனரே நேரில் வந்து நன்றி கூறியதை பார்த்து நெகிழ்ச்சியில் வியந்தனர்.

இந்நிலையில் 'இறுதிச்சுற்று' திரைப்படம் மூன்று வாரங்களை கடந்தும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு பின்னர் பல புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியபோதிலும் இந்த படத்தின் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.