close
Choose your channels

முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்பாதீங்க.... கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Friday, September 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து ஐதராபாத்திற்கு கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார். அவர் மாஸ்க் மற்றும் கிளவுஸ் அணிந்து ஹைதராபாத் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு அருமையான த்ரில்லர் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆனதாகவும், இதனையடுத்து அந்த படத்தை அவரே தயாரித்து நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், முழுக்க முழுக்க நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் மலையாளத்தில் சுமார் 20 திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.