close
Choose your channels

ஒட்டுமொத்த குடும்பத்தின் செல்பி.. முடிவுக்கு வருகிறதா 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்..!

Tuesday, October 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலின் நாயகிகளில் ஒருவரான சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஒட்டுமொத்த செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அனைவரின் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது வாழ்க்கையில் இது தான் பெஸ்ட் செல்பி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களை ஒன்றான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ 1300 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் மீனாவின் அப்பா ஜனார்த்தனையை கொலை செய்தது பிரசாந்த் என்ற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ஜீவா மற்றும் கதிரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பிரசாந்தையும் கைது செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

இந்த நிலையில் இந்த சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒட்டுமொத்த குடும்பத்தின் செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அநேகமாக இந்த புகைப்படம் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எடுத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த சீரியல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.