close
Choose your channels

நகைக்கடை கொள்ளையன் உண்மைக்கதையா 'ஜப்பான்'? இயக்குனர் செய்த மாற்றம்?

Monday, June 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நகைக்கடை கொள்ளையன் உண்மை கதைதான் கார்த்தி நடித்து வரும் ’ஜப்பான்’ படத்தின் கதை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் முருகன் என்ற நகைக்கடை கொள்ளையன் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லலிதா ஜுவல்லரி கடையில் ஏற்பட்ட நகை திருட்டுக்கு திருவாரூர் முருகன் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திருவாரூர் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் முருகன் நகைக்கடை கொள்ளையை தழுவி தான் ’ஜப்பான்’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு காலமான நிகழ்வை மட்டும் இயக்குனர் மாற்றியதாகவும் தெரிகிறது. ஆனால் கார்த்தி அதனை மாற்ற வேண்டாம் என்றும் உண்மை கதையில் இருந்தபடி ’ஜப்பான்’ படத்தின் கதையில் இருக்கட்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வரும் இந்த படத்தில் விஜய் மில்டன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.