close
Choose your channels

புதுப்பொலிவுடன் ஜெயலலிதா நினைவகம் தயாராவது எப்போது?

Saturday, December 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த இடத்தில் பிரமாண்டமான நினைவகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா நினைவகத்தின் டிசைன் தயாராகி வருவதாகவும், டிசைன் உறுதி செய்யப்பட்டவுடன் நினைவகம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் புதுப்பொலிவுடன் கூடிய அம்மா நினைவகம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குழு ஒன்று நேற்று ஜெயலலிதா நினைவகத்தை பார்வையிட்டு, அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.