close
Choose your channels

மீராமிதுன் மீது புகார் அளித்தவர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

Sunday, December 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவரும், நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார் அளித்தவருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்கள் குறித்து இழிவாகவும் கருத்துக்கள் கொண்ட வீடியோக்களை இணையதளத்தில் பதிவு செய்ததாகவும், பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினர் குறித்து அவர் தொடர்ந்து இழிவாக பேசுவதாகவும் அடையாறு மகளிர் காவல் துறையினர்களிடம் பெண்கள் அமைப்பு புகார் செய்தது. இந்த புகார் குறித்து விசாரணை செய்ய ஜோ மைக்கேலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் ஒருமுறை கூட ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மகளிர் போலீசார் விசாரணைக்கு வருமாறு ஜோ மைக்கேலை நேரில் சென்று அழைத்தபோது அவர்களை தரக்குறைவாக பேசியதோடு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து பெண் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் கருதி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த அடையாறு மகளிர் காவல்துறையினர் ஜோ மைக்கல் பிரவீனை கைது செய்தனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.