close
Choose your channels

கொரோனா வைரஸ் எதிரொலி: முக்கிய தமிழ் படத்தின் ஆடியோ விழா ரத்து

Monday, March 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள ஒருசிலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு அடைந்தவர் யாரும் இல்லை என்பதே தற்போதைய தகவல்.

இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை, கேரள மாநில எல்லையில் உள்ள திரையரங்குகள் மால்கள் மூடப்படும் போன்ற ஒரு சில நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த முக்கிய திரைப்படத்தின் ஆடியோ விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் உருவான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நாளை சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக இந்த விழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பதிலாக ஆன்லைனில் இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் சில நாட்களுக்கு எந்த திரைப்படத்தின் விழாக்களும் நடைபெற வாய்ப்பில்லை என்று கோலிவுட் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.