உங்களை பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது: காஜல் அகர்வால் நெகிழ்ச்சிக்கு யார் காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயாருக்கு பதிவு செய்துள்ள நெகழ்ச்சியான பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. காஜல் அகர்வால் தனது தாயாரின் பிறந்தநாளை அடுத்து உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்துள்ளதாவது:
என் அன்பான அம்மா, மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தியாக செய்யும் உங்கள் அன்பு, அழகு, தயவு, ஞானம் ஆகியவற்றால் நீங்கள் போற்றப்படுகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அன்பையும் நிரப்பி வருகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் இவ்வளவு அன்பாக ஏற்றுக்கொள்வதன் மூலம் பொறுமையுடன் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவு செய்கிறீர்கள்
உங்களுடைய அற்புதமான ஆளுமையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாங்கள் ஒவ்வொன்றை கற்று கொள்கிறோம். உங்கள் சாதனைகளை நெருங்குவது கடினம். ஆனால் அதிர்ஷ்டவசமாக உங்கள் சாதனைகளை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை நான் பெற்றேன்
நீங்கள் செய்ததை போல ஒருநாள் என்னாலும் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். நான் உங்களை போலவே இருப்பேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், இந்த பதிவு உங்களை பற்றி முழுமையாக சொல்வதற்கு போதாது. உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடவுள் எப்போதும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.