close
Choose your channels

ரித்விகா சொன்னதை தானே மதுமிதாவும் சொன்னாங்க? முன்னாள் பிக்பாஸ் பிரபலம் கேள்வி

Monday, July 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சாம்பியனுமான ரித்விகா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியபோது யாரும் கோபப்படவில்லை, மாறாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ஆனால் அதையே மதுமிதா சொன்னபோது கோபம் ஏன்? என்று காஜல் பசுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் ரித்விகா, ஜனனி ஐயர், விஜயலட்சுமி ஆகியோர் தமிழ்ப்பெண் ஒருவர் தான் பட்டம் வெல்ல வேண்டும் என்று கூறியபோது யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் டென்ஷன் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரித்விகாவுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்தது என்பதும், மதுமிதா சொன்னதையே லாஸ்லியா நேற்று சொல்லியிருந்தால் எந்தவித பிரச்சனையும் எழுந்திருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழ்ப்பெண் குறித்த நேற்றைய பிரச்சனையின்போது வனிதா கொஞ்சம் அதிகமாகவே டென்ஷன் ஆனார். ‘நீ சினிமாவுல கவர்ச்சியாக நடிக்க கேட்டால் நடிக்க மாட்டாயா. அது போல தான் இதுவும் என மதுமிதாவை பதில் கூறவிடாமல் வனிதா பேசியதையும் காஜல் பசுபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 'நேற்று இரவு சேரனுக்கு தனது இதயத்தை தருவதாக உருக்கமாக சொல்லிவிட்டு இன்று அவரை நாமினேஷன் செய்றீங்களே' என்றும் காஜல் வனிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.