close
Choose your channels

'கக்கூஸ்' ஆவணப்பட பெண் இயக்குனர் திவ்யபாரதி திடீர் கைது

Tuesday, July 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக போராடிய மாணவி வளர்மதியை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் சற்றுமுன் பிரபல சமூகப் போராளியும், 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குனருமான திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வளர்மதியாவது தற்போது நடந்து வரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் திவ்யபாரதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2009ஆம் ஆண்டு அவர் மாணவராக இருந்தபோது ஈடுபட்ட போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தன்னை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக திவ்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெரியார் சாக்ரடீஸ் விருது பெற்ற திவ்யபாரதி இயக்கிய 'கக்கூஸ்' ஆவணப்படம்
துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளை பதிவு செய்திருந்தது. இந்த படத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில் தற்போது பழைய வழக்கு ஒன்றுக்காக கைது செய்யப்படுவது பழிவாங்கும் நடவடிக்கையே என்று சமூகவலைத்தளத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது திவ்ய பாரதிக்கு மதுரை நீதிமன்றம் ஒரு வார நிபந்தனை ஜாமீன் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.