close
Choose your channels

தேசிய விருது பெற்ற சூர்யா ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தாணுவின் அசத்தல் பரிசு!

Saturday, July 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றது என்பதும் குறிப்பாக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து பல திரையுலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யாவும் தனக்கு தேசிய விருது கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சூர்யா நடிக்கவிருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க இருக்கும் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தேசிய விருது பெற்ற சூர்யாவின் ரசிகர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

தேசிய விருது வென்ற திரு சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 5:30 மணிக்கு, வாடிவாசல் திரைப்படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்ற காட்சிகள் வெளியிடுகிறோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

தேசிய விருது பெற்ற சூர்யாவின் ரசிகர்கள் கலைபுலி எஸ் தாணுவின் இந்த அறிவிப்பு சிறப்பு பரிசாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.