close
Choose your channels

கமல் கண்ணில் கோபத்தை வரவழைத்த ஜூலியின் பொய் வாக்குமூலம்

Sunday, July 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி வயிற்று வலியால் துடித்தபோது, 'நீ நடிக்கிறாய்ன்னு காயத்ரியும் நமீதாவும் சொல்றாங்க' என்று ஓவியா சொன்னதாக ஜூலி கமல்ஹாசனிடம் குற்றம் சுமத்தினார். ஆனால் ஓவியாவோ இதை மறுத்தார். ஜூலிதான் 'நான் நடிக்கிறேன்னு காயத்ரி, நமீதா சொன்னாங்க என்று கூறியதாகவும், அவங்க சொன்னா சொல்லிட்டு போகட்டும், உன் மனசாட்சிக்கு உண்மை தெரியும்ன்னு சொல்லி' ஆறுதல் சொன்னதாகவும் கூறினார்.

இந்த இரண்டில் எது உண்மை என்பதை நிரூபிக்க அன்றைய தினத்தின் வீடியோ குறும்படமாக ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜூலி கூறியது அப்பட்டமான பொய் என்பதும், ஓவியா சொன்னதே உண்மை என்பதும் தெரிய வந்தது. இதற்கு பின்னர் அனைத்து பங்கேற்பாளர்களும் தங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டு, ஜூலிதான் தவறானவர் என்று கூறினர்.

ஆனால் ஜூலி மட்டும் பிடிவாதமாக தன் தவறை ஒப்புக்கொள்ளாமல், ஓவியா என்னிடம் கூறியது உண்மை என்றும் அப்படி ஒரு வீடியோ கண்டிப்பாக இருக்கும் என்றும் கூறினார். இதனால் கமல் கண்ணில் சற்று கோபம் வெளிப்பட்டது. நீங்கள் கூறியபடி அப்படி ஒரு வீடியோ இல்லை' என்று ஆணித்தரமாக கூறினார். இதனால் ஜூலியின் தலை கவிழ்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.