close
Choose your channels

மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் நன்கொடை

Sunday, October 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 61ஆம் ஆண்டு தொடக்கவிழா, மூத்த பத்திரிகையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 60-ஆம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா என முப்பெரும்விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை மனோரமா உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மூத்த சினிமா பத்திரிகையாளர்களான பேசும்படம் சம்பத்குமார், பொம்மை சாரதி, நாகை தருமன், பிலிம்நியூஸ் ஆனந்தன், ராண்டர்கை ஆகிய ஐந்து பேர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை கமல்ஹாசன் மற்றும் சிவகுமார் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மேலும் விருதுபெற்ற ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் கமல்ஹாசன் அவர்கள் தலா ரூ.1 லட்சம் வழங்கினார். மேலும், சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்ச ரூபாயை கமல்ஹாசன் வழங்கினார். இந்த தகவலை சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் மேஜர்தாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.