close
Choose your channels

பெங்களூரு சென்ற கமல் என்ன செய்தார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்ற போது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தகவல் புனித் ராஜ்குமார் ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சி என பிஸியாக இருக்கும் கமலஹாசன் சமீபத்தில் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்றார். பெங்களூரில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் அவர்களை அழைத்துக்கொண்டு பெங்களூரில் உள்ள மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்ற கமல்ஹாசன் அவர்களது குடும்பத்திற்கு தனது இரங்கலை நேரில் தெரிவித்துக் கொண்டார். மேலும் புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான போது புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் குறித்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.