close
Choose your channels

வேலையை ஆரம்பிக்கலாமா? 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு

Thursday, August 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சிலர் பெரிய திரையிலும் நல்ல வாய்ப்புகளை பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் 4வது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்றாடம் நாம் யதார்த்தமாக ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. உலகெங்கும் பரவியிருக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய், இந்த உலகம் ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது. எங்கேயோ அமேசானில் தீப்பிடித்தால் இங்கே நமக்கு ஆக்சிஜன் குறைகிறது.

நீங்களும் நானும் வேலைக்குப் போகவில்லை என்றால் நம்மை நம்பி இருப்பவர்கள் நிலைமை என்னவாகும். ஒரு சங்கிலித் தொடராக நம்மை நம்பி இருப்பவர்கள் 5 மாத காலங்களாக வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். நோய் காரணத்தினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக வீட்டிலேயே வேலை இல்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தியபடி நாம் பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். அதே போல் நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம். ஒரு புதிய தொடக்கத்தை புதிய வாழ்க்கையை தொடங்குவோம். நாமே தீர்வு என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து ’வேலையை ஆரம்பிக்கலாமா’ என்று கேள்வி எழுப்பியதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க போவதை அவர் உறுதி செய்தார். இருப்பினும் நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்து அவர் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.