close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் நடந்த மாற்றத்திற்கு காரணம் இதுதான்: கமல்ஹாசன் பேச்சு..!

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று 83 வது நாள் நடைபெற உள்ளது. 80 நாட்களை தாண்டி உள்ள நிலையில் போட்டியாளர்கள் தற்போது தங்கள் விளையாட்டினை புரிந்து கொண்டு இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தந்த வாரம் என்பதால் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு மற்றும் வெறுப்புணர்ச்சி குறைந்து இருந்தது. அன்பு மழை பொழிந்தது என்றும் கூறலாம். அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் வந்து சென்ற பின்னர் வீட்டில் போட்டியாளர்கள் தங்களுடைய பகைமையை மறந்து நட்பு பாராட்டி வருகின்றனர். ஒருவருக்கொருவர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் முதல் புரோமோவில் ’அன்பென்று கொட்டு முரசே என்ற பாரதி சொன்னார். அன்பு மிகுதியாக கொட்டப்பட்டு வழிந்து ஓடியதால் சச்சரவு கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இது நாட்டுக்கும் பாடமாகலாம்.

அன்பு கூடினால் சர்ச்சை குறையும். இங்கு வந்த உறவினர்கள் அன்போடு சேர்த்து அறிவுரைகளையும் வழங்கி விட்டு போயிருக்கிறார்கள், அதனால் ஏதாவது மாற்றம் வருகிறதா என்று பார்போம்’ என கமல்ஹாசன் கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.