close
Choose your channels

ஜெய்பீம் படம் பார்த்தபின் கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான பதிவு!

Tuesday, November 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் தாசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று இந்த படத்தை பார்த்து இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பதும் அதன் பின்னர் பல திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் இந்த படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ‘ஜெய்பீம்’ படம் பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது

ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தா செ ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.