close
Choose your channels

இன்று கொரோனா தடுப்பூசி, அடுத்த மாதம் ஊழல் தடுப்பூசி: கமல்ஹாசன் டுவீட்

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று ஊழல் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன் என்றும் அடுத்த மாதம் ஊழல் தடுப்பூசிக்கு தயாராகி விடுங்கள் என்றும் கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் அடுத்த கட்டமாக தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கிய நிலையில் பல பிரபலங்கள் தொடர்ச்சியாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.