close
Choose your channels

மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே? எப்போது?

Thursday, February 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் புதிய கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியின் தொடக்கவிழா நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல விஐபிக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கமல் ரசிகர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் திரண்டிருந்த இந்த பொதுக்கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயணம் ஏற்கனவே சிவகெங்கை உள்பட மற்ற நகரங்களுக்கும் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நேற்றைய மதுரை பொதுக்கூட்டம் போல் இன்னொரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் திருச்சியில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறும் என்று கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் பிரச்சனைக்காக திமுக உள்பட அனைத்து கட்சிகளுடன் கைகோர்ப்போம் என்றும், தேர்தல் கூட்டணி என்று வரும்போது இனிமேல் தான் எங்கள் கட்சி கூடி பேசி முடிவெடுக்கும் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.