close
Choose your channels

சீரடி சாய்பாபா கோவிலில் கமல்-ரஜினி பட நடிகை.. புகைப்படங்கள் வைரல்..!

Friday, March 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ விஜயகாந்த் நடித்த ’கூலிக்காரன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்தவர் நடிகை ரூபினி. இவர் குழந்தை நட்சத்திரம் முதல் நடித்து வந்தார் என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரூபினி கடந்த 1995ஆம் ஆண்டு மோகன் குமார் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா முழுவதும் ராமநவமி கொண்டாடப்பட்ட போது நடிகை ருக்மணி ராம நவமி தினத்தில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளார்.


நான் உங்கள் அனைவரின் உடல் நலத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை செய்து உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீரடி சாய்பாபா கோவில் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.