close
Choose your channels

கார்த்தி-ஜோதிகா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

Saturday, April 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'முதல்முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பதால் த்ரில்லாக உள்ளது. ஜீத்து ஜோசப் அவர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சத்யராஜ் அவர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய பலம். இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்குவதை அடுத்து படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.