close
Choose your channels

தமிழிசைக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன்

Monday, October 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் பாஜகவுக்கு என இருந்த ஒருசில ஓட்டுக்களையும் தமிழிசை செளந்தரராஜனும், எச்.ராஜாவும் 'மெர்சல்' விஷயத்தில் தேவையில்லாமல் வாயை கொடுத்து இழந்துவிட்டனர். 

இந்த நிலையில் மீண்டும் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில்,  "மெர்சல் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ஊழல்வாதிகளாகக் காட்டுகிறது. மருத்துவர்கள் 5 ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே வேளையில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழிசையின் இந்த டுவீட்டுக்கு பதிலளித்த 'துருவங்கள் 16' இயக்குனர் கார்த்திக் நரேன், '"தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும். ஏன் சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களே. அவர்களை கேட்கலாமே?" என்று தெரிவித்துள்ளார். கார்த்திக் நரேனின் இந்த பதிலடிக்கு விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.