close
Choose your channels

முதல் பாகம் எடுத்த அதே பஸ்ஸில் 'சுந்தரா டிராவல்ஸ் 2' படப்பிடிப்பு? 

Thursday, July 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முரளி கேரக்டரில் யோகிபாபு, வடிவேலு கேரக்டரில் கருணாகரன் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து கருணாகரன் கூறியபோது ’சுந்தரா டிராவல்ஸ் படம் குழந்தைகளுக்கு மிகவும் கவர்ந்த படமாக இருந்தது என்றும், அதேபோல் இரண்டாம் பாகமும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தின் கதை முழுக்க முழுக்க பேருந்தில் உள்ளே எடுக்கப்படும் என்றும், அந்த பேருந்தில் நடந்த நிகழ்வு ஒன்று தான் இந்த படத்தின் கதை என்றும் கூறினார்.

மேலும் முதல் பாகத்தை எடுத்த அதே பேருந்தில் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் இத்தனை வருஷமாக அந்த பேருந்தை பேருந்தின் உரிமையாளர் வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை என்றும் அப்படியே அவர் வைத்திருந்தாலும் எங்கள் கையில் பேருந்து வந்தால் அந்த பேருந்து என்ன ஆகும் என்றும் தெரியவில்லை என்றும் காமெடியாக கூறினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் சென்னை மற்றும் சிறுமலை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.