close
Choose your channels

ஜோதிகாவின் 'நாச்சியார்' வசன வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thursday, December 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது,. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசிய ஒரு வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ஜோதிகா மற்றும் பாலாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த தலித் பாண்டியன் என்பவர் இதுகுறித்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பாலா மற்றும் ஜோதிகா மீது வழக்கு தொடர்ந்தார். ஜோதிகா பேசிய இந்த வசனத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது 'நாச்சியார் படத்தில் ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை வழக்கு தொடுத்த  இந்திய குடியரசு கட்சியின் தலித் பாண்டியன் தர வேண்டும் என்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஜோதிகா, இயக்குநர் பாலா மீது நடவடிக்கை கோரிய இந்த வழக்கை வரும் ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.