close
Choose your channels

தமிழில் பேச சொன்னபோது நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Sunday, May 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெலுங்கில் பேசினார். அப்போது தமிழில் பேச சொன்னபோது அவர் அளித்த பதில் என்ன என்பதை பார்ப்போம்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சகோதரி ரேவதி சுரேஷ், தந்தை சுரேஷ்குமார், தாய் மேனகா ஆகியோர்களுடன் திருப்பதிக்கு வந்திருந்த நிலையில் அவர் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகிகள் தீர்த்த பிரசாதங்களை அளித்து வேத ஆசியும் வழங்கினார்.

இந்த நிலையில் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’நீண்ட நாட்களுக்குப் பின்னர் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது, எனது சகோதரி ரேவதி குறும்படம் இயக்கி இருக்கிறார், நானும் தெலுங்கில் ’போலோ சங்கர்’ படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறினார். அப்போது தமிழில் பேசுமாறு செய்தியாளர் கேட்டபோது ’நான் இப்போது திருப்பதியில் தான் இருக்கிறேன்’ என்று கூறி மீண்டும் தெலுங்கில் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.