close
Choose your channels

சிம்புவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகியா? அப்ப தீபிகா படுகோன் என்ன ஆச்சு..?

Friday, May 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகவும் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்து கால்ஷீட் மற்றும் சம்பள விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீபிகா படுகோன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருமே இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இருவருக்கும் இந்த படத்தில் சம அளவில் முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள் என்றும் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஸ்டண்ட் பயிற்சிக்காக சிம்பு லண்டன் செல்ல இருப்பதாகவும், அவர் இந்தியா திரும்பிய பின், வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கிய முதல் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.