close
Choose your channels

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தம்பதிக்கு மணிவிழா வாழ்த்துக்கள்

Saturday, May 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்து மதத்தை சேர்ந்த தம்பதியர்களில் ஆண்களுக்கு 60 ஆம் வயதில் "அறுபதாம் கல்யாணம்" என்கிற பெயரில் நடத்தப்படும் விழா "ஷஷ்டியப்த பூர்த்தி" அல்லது "மணிவிழா" என்று அழைக்கப்படுகிறது. அறுபதாவது வயது தொடங்கும்போது திருமணம் போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களுக்கு இன்று திருக்கடையூரில் மணி விழா சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் கே.எஸ்.ரவிகுமார்-கற்பகம் ரவிகுமார் தம்பதியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தம்பதிகள் இன்றுபோல் என்றும் மன நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ எமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.