close
Choose your channels

இந்த 4 புகைப்படங்கள் தான் எங்கள் வாழ்க்கை.. திருமண நாளில் குஷ்புவின் நெகிழ்ச்சியான பதிவு..!

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை குஷ்பூ நேற்று தனது 23 வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த 4 முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தை பதிவு செய்து இதுதான் எங்களது திருமண வாழ்க்கை என்று பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ என்பதும் ரஜினிகாந்த் பிரபு நடித்த ’தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ’வருஷம் 16’ ‘சின்ன தம்பி’ ’மன்னன்’ ’சிங்காரவேலன்’ ’அண்ணாமலை’ ’பாண்டியன்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்தார் என்பதும் ஆனால் அவரது காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை குஷ்பு கடந்த 2000 ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று அவர் தனது 23வது திருமண நாளை கொண்டாடிய நிலையில் நான்கு முக்கிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

காதலிப்பதற்கு முன், காதலித்த பிறகு, திருமணத்தின் போது, தற்போது என்ற நான்கு விதமான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த நான்கு புகைப்படத்தில் எங்களது வாழ்க்கை அன்று முதல் இன்று வரை எதுவும் மாறவில்லை என்று கூறியுள்ளார். மேலும் எப்போதும் எனக்கு துணையாய் இருக்கும் எனது கணவருக்கு நன்றி என்றும் அன்று போல் என்றும் அவர் என்னை நேசிப்பதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். குஷ்புவின் நெகிழ்ச்சியான இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.