close
Choose your channels

லெஜண்ட் சரவணன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா? வைரல் புகைப்படம்!

Wednesday, September 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ஜேடி-ஜெர்ரி இயக்கி வரும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் நாயகியாக ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகிறார் என்பதும் ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து வரும் அவரது கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றும் கூறப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் - இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்பதும் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை ஊர்வசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாமர் உடையுடன் லெஜண்ட் சரவணன் அவர்களுடன் ஊர்வசி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.