close
Choose your channels

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் காலமானார்!

Tuesday, April 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79.

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல திரைக்காவியங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அவர் காலமானார்.

சமீபத்தில் விஜய் நடித்த 'தெறி' மற்றும் ரஜினி நடித்த 'பேட்ட', விஜய்சேதுபதியின் 'சீதக்காதி', உள்பட ஒருசில படங்களில் நடித்த இயக்குனர் மகேந்திரன் திரையுலகில் மட்டுமின்றி எழுத்துத்துறையிலும் பணிபுரிந்துள்ளார். துக்ளக் பத்திரிகையில் பணியாற்றிய மகேந்திரன், சில நாவல்களையும் எழுதியுள்ளார். இயக்குனர் மகேந்திரனுக்கு ஜான் மகேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் விஜய் நடித்த 'சச்சின்' உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த மகேந்திரன் அவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.