close
Choose your channels

மாசக்கடைசியில இவன் தான் சோறு போடுவான்: ஓட்டல் முதலாளிக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2010 களில் வறுமையில் இருந்த போது இவன் தான் எனக்கு சோறு போடுவான் என ஓட்டல் முதலாளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’கைதி மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமலஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும், இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அடுத்ததாக விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஓட்டல் முதலாளியும் தனது நெருங்கிய நண்பருமான ஸ்ரீனி என்பவரின் புகைப்படத்தை பதிவு செய்து, கடந்த 2010களில் தான் வறுமையில் இருக்கும் போது மாசக் கடைசியில இவன் தான் எனக்கு சோறு போடுவான் என்றும் எனது நண்பர் ஸ்ரீனிக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.