close
Choose your channels

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தயாரிக்கும் லைகா.. 2 படங்கள் நடித்த நடிகைக்கு ஜாக்பாட்..!

Sunday, January 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் 2 படங்கள் மட்டுமே நடித்த நடிகைக்கு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்தார் என்பதும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே அவரது நடிப்பில் இதுவரை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் போது திரைப்படத்திலும், ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் அதிரடி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’மாமுண்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் தான் நாயகி என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.