close
Choose your channels

விடிவி 2: 17 வருடங்களுக்கு பின் கவுதம் மேனனுடன் இணையும் நாயகன்

Wednesday, February 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விடிவி 2: 17 வருடங்களுக்கு பின் கவுதம் மேனனுடன் இணையும் நாயகன்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன்  இயக்கிய மிக அருமையான காதல் படங்களில் ஒன்று 'விண்ணை தாண்டி வருவாயா'. இந்த படத்தில் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக சிம்பு, த்ரிஷா வாழ்ந்திருப்பார்கள். காதலர்களின் மிக விருப்பத்திற்குரிய படமான இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார். 8 வருடங்களுக்கு பின், கார்த்திக்கின் நிலை என்ன? என்பதுதான் கதையின் சாரம்சம். இந்த படத்தில் கார்த்திக் வேடத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 17 வருடங்களுக்கு முன், கவுதம்மேனனின் முதல் படமான 'மின்னலே' படத்தில் நடித்த மாதவன், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தின் முக்கிய வேடங்களில் புனித் ராஜ்குமார் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர். ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் ஒரு காதல் காவியமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.