close
Choose your channels

காதலரை கைப்பிடிக்கும் சீரியல் நடிகை: திருமண தேதியும் அறிவிப்பு!

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீடிவியில் ஒளிபரப்பான தொடரில் நடித்த நடிகை ஒருவர் தனது காதலரை கைப்பிடிக்க இருப்பதாகவும் திருமண தேதியை அவர் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜீடிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர் ’பூவே பூச்சூடவா’. ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து இந்த தொடரில் நடித்தனர் என்பதும் இந்த ஜோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரேஷ்மா மற்றும் மதன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்று கூறப்பட்ட நிலையில் நவம்பர் 15ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரேஷ்மா முரளிதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண அழைப்பிதழை வெளியிட்டு நாங்கள் திருமண பந்தத்தில் இணையவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதே திருமண அழைப்பிதழை மதனும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த காதல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.