close
Choose your channels

மும்பை வெள்ளம் குறித்து மாதவன் கூறியது என்ன?

Wednesday, August 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மும்பை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாலைகள், ரயில் பாதைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் மாதவன் மும்பையில் இருந்து வெள்ளம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் மும்பையில் தற்போது ரியல் எஸ்டேட் பிசினஸ் உச்சத்தில் இருப்பதாகவும், மும்பையில் உள்ள அனனத்து கட்டிடங்களும் தற்போது கடல் பார்வை கட்டிடங்களாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மும்பையில் See Facing Building என்று கூறப்படும் கடல் பார்வையுள்ள கட்டிடத்தின் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதும், ஆனால் தற்போதுள்ள கட்டிடங்கள் அனைத்துமே நீரில் மூழ்கியுள்ளதையும் மாதவன் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.