close
Choose your channels

மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டார்களா 'வி ஆர் பாய்ஸ்?

Saturday, October 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விதிமுறைகளை மீறியதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட மதுமிதா, வெளியே வந்தவுடன் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரின் மீதும் குற்றம் சாட்டினார்

குறிப்பாக காவிரி பிரச்சினை குறித்து தான் பேசிய போது தனக்கு எதிராக கவினும் அவரது குழுவினர்களும் பேசியதால் மன உளைச்சல் ஏற்பட்டதால் கையை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அவர் கூறினார்

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் தங்களது செயலுக்கு கவின் குழுவினர் வருத்தம் தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மதுமிதாவின் கணவர் மோசஸ் ’.... கேங் மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால்...பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம் மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

இந்த டுவீட்டில் கேங் என்ற வார்த்தைக்கு முன் இருக்கும் டேஷுக்கு என்ன வார்த்தையை அவர் மனதிற்குள் உபயோகித்திருப்பார் என்பது அனைவரும் யூகிக்கக்கூடியதே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.