close
Choose your channels

இங்கெல்லாம் நீதி கிடைக்காது, போலீசுக்கு போங்க.. பாலியல் புகார் குறித்து பிரபல நடிகை

Sunday, December 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் திரைப்பட சங்கங்களில் புகார் கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்றும் பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ’கோரிப்பாளையம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’மைதானம்’ ’சோக்காலி’ ’அப்புச்சி கிராமம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை சுவாசிகா. இவர் மலையாள திரையுலகில் தற்போது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்த முன்னணி நடிகைகள் சேர்ந்து பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

நடிகைகள் தங்களுக்கு பாலியல் பிரச்சனை ஏற்பட்டால் இந்த சங்கத்தில் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் இதுகுறித்து நடிகை சுவாசிகா கூறியபோது, ‘மலையாள திரையுலகை பொறுத்தவரை நடிகைகள் பாதுகாப்பாக தான் இருக்கின்றார்கள். ஒருவேளை அதையும் மீறி நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் சினிமா சார்ந்த சங்கத்தில் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மூலம் நீதி கிடைக்கும் என்பதில் எந்த உறுதியும் கிடையாது. எனவே பாலியல் தொல்லை ஏற்பட்டால் உடனே காவல்துறை அல்லது மகளிர் ஆணையத்தில் புகார் அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.