close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' டீசர் சோழர்கள் தலைநகரில் நடைபெறுகிறதா?

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீட்டு விழாவை சோழர்களின் தலைநகரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்த மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது சோழர்கள் காலத்தில் தலைநகராக இருந்த தஞ்சையில் இந்த படத்தின் இசை, டீசர் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos