close
Choose your channels

பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு திருமணமா?

Friday, August 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நேற்று இரவு பரோலில் விடுதலையானார்.

பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிக்கும் பொருட்டு பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து பேரறிவாளன் மிகுந்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருப்பத்தூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது என்பது உள்பட ஒருசில நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகனை பரோலில் எடுக்க கடந்த சில வருடங்களாக கடும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், இந்த ஒருமாத பரோல் விடுதலை முடிவடைதற்குள் மகனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மிக விரைவில் பேரறிவாளன் திருமணம் குறித்த செய்தி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.