கமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவுரை
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் கட்சியை அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் திடீரென கமல்ஹாசனின் நலவிரும்பியாக அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் அறிவுரை ஒன்றை அவருக்கு வழங்கியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:
கமல்ஹாசன் ஒரு சிறந்த தமிழ் நடிகர். அனைத்து திறமையையும் கொண்டவர். யாரோ தவறான வழிகாட்டுதலின்பேரில் கட்சி ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு மக்களை சந்திக்க கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு சரியாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
இன்றைய சூழ்நிலையில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதை அவருடைய நலவிரும்பிகள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனியாக போட்டியிட்டால் தேர்தலுக்கு பின் அவர் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாவார். எதையும் ஆராய்ந்து செய்யக்கூடிய திறமை படைத்த கமல்ஹாசன், யாரோ தவறான வழிகாட்டுதலின்பேரில் இந்த தவறான முடிவை எடுத்துள்ளார் என்பதே எனது கருத்து
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.