close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் பழம்பெரும் பாடகியை பாட வைத்த டி.இமான்: வைரல் புகைப்படங்கள்!

Thursday, September 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் பல திறமையான பாடகர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு அளித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் பழம்பெரும் பாடகர்கள், பாடகிகளையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் திரையுலகின் பழம்பெரும் பாடகி ஒருவருக்கு பாடும் வாய்ப்பை கொடுத்துள்ள தகவல் புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடலை பாடியவர் பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம். சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்ற இவருக்கு மீண்டும் தான் இசையமைக்கும் படத்தில் ஒரு பாடலை பாட இசையமைப்பாளர் டி இமான் வாய்ப்பு அளித்துள்ளார்.

முருகேசன் என்பவர் இயக்கத்தில் உருவான ’மலை’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை வாணி ஜெயராம் பாடியுள்ளதாகவும், இந்த பாடலை யுகபாரதி எழுதி இருப்பதாகவும் இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் டி இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் வாணி ஜெயராம் உடன் டி இமான் மற்றும் படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பாடகர்களையும், பழம்பெரும் பாடகர்களையும் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்து வரும் இசையமைப்பாளர் டி இமானுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.