close
Choose your channels

அடுத்த பட டைட்டில் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக் ஏற்கனவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த படம் ஒரு அரசியல் படம் என்றும், இந்த படத்தின் டைட்டில் 'நாற்காலி' என்றும் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். 'நாற்காலி' என்பது எனது அடுத்த படத்தின் டைட்டில் இல்லை என்றும், இதுகுறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்' என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக பரவி வந்த இந்த பிரச்சனைக்கு ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும், தனது அடுத்த படத்தின் டைட்டிலை அவர் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.