close
Choose your channels

2 டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை: படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

Friday, August 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏற்கனவே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். தற்போது இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் நடிக்க வேண்டிய படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

கடந்த 80கள், 90களில் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை நதியா என்பதும், திருமணத்திற்கு பின் தனது கணவருடன் அமெரிக்கா சென்ற நதியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்த ’எம் குமரன் S/o மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நதியா தற்போது பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்

‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படம் ஆகியவற்றில் நடித்து வரும் நதியா, சமீபத்தில் லிங்குசாமி படத்தின் படப்பிடிப்புக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் தனக்கு எப்படி கொரோனா பாதிப்பு வந்தது என்றே தெரியவில்லை என்றும் தனக்கு மட்டுமின்றி அம்மா அப்பா மற்றும் வீட்டில் வேலை செய்பவர்கள் என மொத்தம் நான்கு பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் நதியா படக்குழுவினர்களிடம் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து நதியா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிங்குசாமி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.