close
Choose your channels

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கலா? பிரபல நடிகரின் தகவலால் பரபரப்பு

Wednesday, April 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் விஜய நிர்மலாவின் மகன் நடிகர் நரேஷ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனது தாயாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க யாருக்கும் அனுமதி தரவில்லை என்றும் இது குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி வெறும் வதந்தி தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தானே தனது தாயாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியதாகவும், அதற்கு தனது தாயாரும் உதவியதாகவும் கூறியுள்ளார். ஆனால் தாயாரின் மறைவுக்கு பின்னர் அந்த பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் விரைவில் அந்த திரைக்கதையை எழுதி முடித்துவிட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே தனது தாயார் விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அவர் உறுதிபட கூறியுள்ளதை அடுத்து கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த விஜயநிர்மலா அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெமினி கணேசன் நடித்த ’பணமா பாசமா’ என்ற திரைப்படத்தில் ’எலந்த பழம் எலந்த பழம்’ என்ற பாடலுக்கு நடனமாடியவர் விஜயநிர்மலா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.