close
Choose your channels

'புஷ்பா 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 38 வயது தேசிய விருது பெற்ற நடிகை?

Tuesday, August 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் இரண்டாம் பாகத்தில் மேலும் சில நடிகர்கள் இணைய இருப்பதாகவும் குறிப்பாக முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’புஷ்பா 2’ படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற 38 வயது நடிகை ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’புஷ்பா 2’ படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜ்வான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி, ’புஷ்பா 2’ படத்தில் இணைவதால் அந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.