close
Choose your channels

தேசிய அளவில் விவாதப்பொருள் ஆகும் மெர்சல்-ஜிஎஸ்டி விவகாரம்

Friday, October 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒருசில கலவையான விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது.

பாஜக தலைவர்களின் அழுத்தத்தினால் இந்த படத்தின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்கள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தான் இன்று தமிழகத்தின் அனைத்து செய்தி சேனல்களின் விவாத பொருளாக உள்ளது. அரசியல் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும், விஜய் ரசிகர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு விவாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக செய்தி சேனல்கள் மட்டுமின்றி தேசிய அளவில் பிரபலமான ஆங்கில சேனல்களும் தற்போது இந்த விவாதத்தை தொடங்கிவிட்டதால் இந்த பிரச்சனை தற்போது தேசிய பிரச்சனையாக மாறிவிட்டது. 

மேலும் விஜய் நடித்த 'கத்தி' படத்தில் 2ஜி வசனம் இடம்பெற்ற போது விஜய்யை பாராட்டிய அதே அரசியல் தலைவர்கள் தான் இன்று ஜிஎஸ்டி வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.